இந்தியா

தேடுதல் வேட்டையில் ராணுவம்

அனந்த்நாக் என்கவுண்டர் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2022-09-06 11:22 GMT   |   Update On 2022-09-06 11:30 GMT
  • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
  • அனந்தநாக் மாவட்டத்தில் இன்று நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News