இந்தியா

குஜராத் சட்டசபையில் அமளி: 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் "சஸ்பெண்டு"

Published On 2024-02-20 08:00 GMT   |   Update On 2024-02-20 08:00 GMT
  • கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
  • அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

போலியான அரசு அலுவலகத்தை திறந்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு நிதியை பறித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த ஊழல் தொடர்பாக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

அமளியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒருநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். காங்கிரசின் பலம் 15 ஆகும். அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

Tags:    

Similar News