ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்
- தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏறு்பட்டது. அம்பர்நாத் எம்ஐடிசியில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரிக் ஆசிட் டேங்க் அருகே மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமை அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ் நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் சூர்யகாந்த் ஜிமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தானே குடிமை அமைப்பின் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் யாசின் தத்வி கூறினார்.
மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.