இந்தியா
VIDEO: பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி
- கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.
- இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும் கொண்டுவரட்டும்
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மீட்பின் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்திகளைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.
இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும், கருணைக்கான ஒருமித்த உறுதிப்பாட்டையும் கொண்டுவரட்டும்" என்று தெரிவித்தார்.