செய்திகள்
விதிகளை மீறி பேட்டி- மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin