செய்திகள்
கொளுத்தும் வெயிலில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் வாக்குசேகரிப்பு
காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்க பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க, த.மா.கா. புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019