செய்திகள்

மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்கு

Published On 2019-04-11 11:54 GMT   |   Update On 2019-04-11 11:54 GMT
மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019
மதுரை:

பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் நேற்று தபால் வாக்குப்பதிவு செய்த போலீஸ்காரர்களிடம் ஓட்டு கேட்டார்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கமீனா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LoksabhaElections2019

Tags:    

Similar News