உள்ளூர் செய்திகள்

பலியான ஜெனோஸ்டன்.

காயல்பட்டினத்தில் படகு மோதி வாலிபர் சாவு

Published On 2022-09-24 09:40 GMT   |   Update On 2022-09-24 09:40 GMT
  • காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22).
  • கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22). மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

நேற்று அதிகாலையில் ஜெனோஸ்டன் தனது சகோதரரான எனோஸ்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிராஸ்வின், ரெவஞ்சி ஆகிய 4 பேரும் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர்.

படகு மோதியது

பின்னர் மதியம் சிங்கித்துறை கடற்கரைக்கு திரும்பினர். படகை கடலிலிருந்து தரை பகுதிக்கு இழுக்கும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது. இதனால் நெஞ்சில் பலத்த அடிபட்ட நிலையில் வலி தாங்காமல் அவர் அலறி உள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனோஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இந்த விபத்து குறித்து ஜெனோஸ்ட்டனின் தாய் லதா (42) அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் கடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News