உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2022-09-17 15:42 IST   |   Update On 2022-09-17 15:42:00 IST
  • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 25). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் சூனாம்பேடு அடுத்த ஆரோவில் நகரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.

Tags:    

Similar News