உள்ளூர் செய்திகள்
திருமணமான பெண்ணை மணக்க முயன்ற வாலிபர் கைது
- சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றார்.
- நேற்று மாலை சரவணணை அடித்து உதைத்து, பின்னர் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை ராமமூர்த்தி புதூரை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் சரவணன் (வயது27). இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி (20) என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை, 9-ந் தேதி முதல் 2 பேரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதையடுத்து சரவணன், சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதையறிந்த சரவணன் மனைவி மீனாட்சி, இவரது அக்காள் உள்ளிட்டோர் நேற்று மாலை சரவணணை அடித்து உதைத்து, பின்னர் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர். போலீசார், சரவணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.