உள்ளூர் செய்திகள்

கோவை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2023-11-03 09:10 GMT   |   Update On 2023-11-03 09:10 GMT
ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

கோவை,

கோவை ஆலாந்துறை பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சுமதி (வயது 35). கூலித் தொழிலாளி.

கடந்த சில நாட்களாக இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்த போது திடீரென சுமதியின் உடல் நிலை மோசமடைந்தது.

இதனையடுத்து அவரை அவரது கணவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு சுமதியை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

Tags:    

Similar News