உள்ளூர் செய்திகள்
நாட்டுப்புற பாடல்கள் பாடி களை எடுக்கும் பெண்கள்
- நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.