Iran War: ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: கோவை-ஷார்ஜா, அபுதாபி விமானங்கள் ரத்து
- கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாட்களும், கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து அபுதாபி மற்றும் ஷார்ஜா இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 விமானங்கள் ரத்து வருகிற 9-ந் தேதி வரை தொடரும் எனவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு ஏர் அரேபியா விமான பயணிகள், 9087778081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.