உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி. 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி-பரபரப்பு

Published On 2022-06-20 11:46 GMT   |   Update On 2022-06-20 11:46 GMT
  • தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர்.
  • மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி . இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் சுந்தராம்பாள், மகள் மகாலட்சுமி மற்றும் பேத்தி சவுரபி ஆகியோருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர் .இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு நீதி வேண்டும் என கோரியிருந்தனர்.மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News