உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-10-01 08:57 GMT   |   Update On 2023-10-01 08:57 GMT
  • கவிதாவிற்கு சர்க்கரை நோயால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
  • வாழ்க்கையில் வெறுப்படைந்த கவிதா தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது43). இவரது மனைவி கவிதா (41). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவிற்கு சர்க்கரை நோயால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் தீரவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் வெறுப்படைந்த கவிதா கடந்த 25-ந் தேதி வீட்டில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News