இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
- இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* உங்களால் முதலமைச்சரான நான், உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
* எந்த வேலையைக் கொடுத்தாலும் 200 சதவீதம் சிறப்பாக செய்யக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு.
* கள்ளக்குறிச்சியில் புதிய ஆட்சியர் கட்டிடம் உள்ளிட்ட ரூ.1,773 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன்.
* திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
* சிலர் வாயிலேயே வடை சுடுவார்களே, தி.மு.க. அரசு அப்படி அல்ல. மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படுத்தும் அரசு.
* கள்ளக்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை கூற போகிறேன்... நான் ரெடி.. நீங்க ரெடியா..?
* கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி, நாகலூரில் அங்கன்வாடி கட்டிடம், சுற்றுலா மாளிகை, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
* ரிஷிவந்தியம் கல்லூரிக்கு புதிய கட்டிடம், பிள்ளையார்குப்பத்தில் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* சங்கராபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்கள், புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சிக்கு புதிய பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் வர உள்ளது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3.18 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 741 பள்ளிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தால் ஒரு மாணவி, எஸ்.பி.ஐ. வங்கிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* புதுமைப்பெண் திட்டத்தில் 16,094 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
* கள்ளக்குறிச்சியில் 7965 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
* விபத்தில் சிக்குவோருக்கான இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 10,000 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி வாரியாக செய்யப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.
* இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
* கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார்.