என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி மாவட்டம்"
- திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
- இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* உங்களால் முதலமைச்சரான நான், உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
* எந்த வேலையைக் கொடுத்தாலும் 200 சதவீதம் சிறப்பாக செய்யக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு.
* கள்ளக்குறிச்சியில் புதிய ஆட்சியர் கட்டிடம் உள்ளிட்ட ரூ.1,773 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன்.
* திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
* சிலர் வாயிலேயே வடை சுடுவார்களே, தி.மு.க. அரசு அப்படி அல்ல. மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படுத்தும் அரசு.
* கள்ளக்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை கூற போகிறேன்... நான் ரெடி.. நீங்க ரெடியா..?
* கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி, நாகலூரில் அங்கன்வாடி கட்டிடம், சுற்றுலா மாளிகை, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
* ரிஷிவந்தியம் கல்லூரிக்கு புதிய கட்டிடம், பிள்ளையார்குப்பத்தில் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* சங்கராபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்கள், புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சிக்கு புதிய பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் வர உள்ளது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3.18 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 741 பள்ளிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தால் ஒரு மாணவி, எஸ்.பி.ஐ. வங்கிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* புதுமைப்பெண் திட்டத்தில் 16,094 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
* கள்ளக்குறிச்சியில் 7965 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
* விபத்தில் சிக்குவோருக்கான இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 10,000 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி வாரியாக செய்யப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.
* இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
* கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி வளாகத்தில் நகர்புற சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை–வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி–யோர் முன்னிலை வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுத–பாணி, மருத்துவர்கள் ஜெகதீஷ், பிரபாவதி, ஜெனிபர் ராகுல் ஆகி–யோர் பங்கேற்றனர். மேலும் அடங்கிய மருத்துவ குழுவினர் பொது–மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ–மனைகள், மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில் நடைபெறுகிறது. மேலும், சிறப்பு ஏற்பா–டாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் 93 மையங்கள் உட்பட2,448-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமுன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Booster Dose) 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தியவர்கள் மூன்றாவ–தாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இப்பணிக்காக 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு 40,500 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு–ள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






