உள்ளூர் செய்திகள்

வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

Published On 2023-06-07 09:06 GMT   |   Update On 2023-06-07 09:06 GMT
  • கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
  • சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடவள்ளி,

கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.

அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News