தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் நாளை (22.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அம்பத்தூர் தொழிற்பேட்டை: 1வது பிரதான சாலை, 3வது தெரு, தபால் அலுவலக சாலை தெற்கு கட்ட பிரிவு 1, எம்டிஎச் சாலை, 3வது பிரதான சாலை.
அம்பத்தூர் சிட்கோ: 5வது தெரு, யாதவா தெரு, ஈபி சாலை, கிராமம் தெரு, 4வது தெரு, 5வது தெரு, செக்டார் 3 வடக்கு கட்டத்தின் 6வது தெரு.