உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே அரசு பஸ்சில் சென்ற இளம்பெண்ணை கடத்தியது ஏன்?- உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2023-08-09 09:19 GMT   |   Update On 2023-08-09 09:19 GMT
  • காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.
  • வாகன சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

களக்காடு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.

காரில் ஏற்றி

நாங்குநேரி அருகே அரசு பஸ் சென்றபோது, அதன் குறுக்காக ஒரு கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.

அவர்கள் வழுக்கட்டாயமாக கயத்தாறு இளம்பெண்ணை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். கார் குறித்து நெல்லை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, வாகன சோதனை நடத்தப்பட்டது.

கடத்தியது ஏன்?

கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே நடந்த சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களை நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் இளம்பெண்ணை கடத்தியது ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், கணவர் இறந்து விட்ட நிலையில் திடீரென உடல் நலக்குறைவுக்குள்ளான குழந்தையை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்ததும் தெரியவந்தது.

4 பேரிடம் விசாரணை

அப்போது அங்கிருந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவரை பார்க்கவே தற்போது இளம்பெண் பஸ்சில் குமரிக்கு சென்றதும் விசா ரணையில் தெரிய வந்தது.

அந்த வாலிபரை பார்க்க கூடாது என்பதற்காகவே, அந்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் அறிந்த னர். இதுகுறித்து போலீசார் இளம் பெண்ணின் உறவி னர்கள் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News