தனியார் நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் மோசடி
- தனியார் நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் தெருவில் ஜேம்ஸ் கென்னடி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு இந்திரா நகரைச் சேர்ந்த செல்வரத்தினம் (38) விற்பனையாளராகவும், செட்டிக்குடி தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (38) என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணியாற்றினர். கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது செல்வர த்தினம், ஈஸ்வரி ஆகியோர் ரூ. 15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரிடம் பணத்தை தருமாறு கேட்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து அந்த நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக செல்வரத்தினம், ஈஸ்வரி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.