உள்ளூர் செய்திகள்
- பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 25). இவர் அதேபகுதியில் உள்ள கருப்பணசாமி ேகாவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுவிட்டான்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.