உள்ளூர் செய்திகள்
- வாலிபர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- கிணற்றில் விழுந்து மற்றும் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவரது மனைவி கிருஷ்ணம்மாள். கருப்பசாமி தினமும் மது குடித்து விட்டு வந்ததால் கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து வெளியில் சென்ற கருப்பசாமி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 68). இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் புஷ்பராஜ் ஆவியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.