- காதலனுடன் இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரெபேக்காள். இவர்களுக்கு சாந்தி(வயது21) என்ற மகளும், ஐசக் என்ற மகனும் உள்ளனர். சாந்தி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி மற்றும் ஐசக் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். ரெபேக்காள் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, சாந்தி வீட்டில் இல்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அப்போது ஐசக்கின் செல்போனுக்கு ஒரு நபர் போனில் அழைத்தார். அவர் சாந்தியை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துக்கொண்டு பாலக்காடு செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.