வாகனம் மோதி தொழிலாளி-மூதாட்டி பலி
- அருப்புக்கோட்டை அருகே வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி-மூதாட்டி பலியாகினர்.
- இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்மு சின்னம்ப ட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் காளையார் கரிசல்குளத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு புறப்பட்டார்.
கரிசல்குளம் தொழிற்பயிற்சி கூடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையா ளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இளைய ராஜா தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் மாத வன். இவரது மனைவி பரமேஸ்வரி (66). இவர் சம்பவத்தன்று மதுரை ரோட்டில் உள்ள போக்கு வரத்து பணிமனை முன்பு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார்பரமேஸ்வரி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.