- சிவகாசி தண்ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள் ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சத்தியபிரியன் (வயது 17).
இவர் சிவகாசியில் இயங்கி வரும் தனியார் தண் ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் தனது பெற்றோரிடம் கூறி விட்டு வேலைக்கு சென்ற சத்தியபிரியன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு லாரியில் தண்ணீர் சப்ளை செய்வதற் காக சென்றார். மீண்டும் திரும்பிய நிலையில் திடீரென்று மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அங்கிருந்த–வர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரது தந்தை வெயிலப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி சிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரை வரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.