உள்ளூர் செய்திகள்
- கல்லூரி மாணவிகள் மாயமாகின.
- இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது மகள் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சிவகாசி தென்றல் நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகள் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.