உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீராங்கனை-ஆசிரியை தற்கொலை

Published On 2022-08-10 09:20 GMT   |   Update On 2022-08-10 09:20 GMT
  • விளையாட்டு வீராங்கனை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
  • சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி பள்ளப்ப ட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகள் தங்கபாண்டியம்மாள் (18). கல்லூரி மாணவியான இவர் ஜூடோ விளையாட்டு வீராங்கனை ஆவார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கபாண்டியம்மாள் விளையாடி உள்ளார். திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பெற்றோர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த தங்கபாண்டியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சுழி அருகே உள்ள வீரநல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (60). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் அந்ேதாணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய புஷ்பா (50). வடபட்டி நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய புஷ்பா சம்பவத்தன்று இரவு கத்தியால் உடலில் கீறிக்கொண்டு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News