மத்தியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி - எடப்பாடி பழனிசாமி
- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
* பிரதமர் மோடி பங்கேற்கும் நாளைய பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
* தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.
* மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.