உள்ளூர் செய்திகள்
- பள்ளி மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் 12-ம் வகுப்பு படித்துவிட்டு கம்ப்யூட்டர் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று 11 மணிக்கு வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.