உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

Published On 2023-09-11 08:02 GMT   |   Update On 2023-09-11 08:02 GMT
  • மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியானார்.
  • திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள நத்தகுளம் பகுதியை சேர்ந்தவர் பூவணலிங்கம் என்பவரது மகன் பதினெட்டாம்படி, விவசாயி. இவர் நேற்று வீரசோழன் பகுதிக்கு சென்று விதை நெல் வாங்கிக்கொண்டு மீண்டும் தனது சொந்த ஊரான நத்தகுளம் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டங்குளம் சாலையில் வந்து கொண்டி ருந்ததார்.

அப்போது வீரசோழன்-ஒட்டங்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகளுக்காக சாலையின் குறுக்கே கயிறு கட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு கயிறு கட்டியதற்கு அடை யாளமாக எந்தவொரு எச்சரிக்கை சின்னங்களும் வைக்கப்படவில்லை.

இதனை கவனிக்காமல் வந்த பதினெட்டாம்படி சாலையின் குறுக்கே கட்டப்படிருந்த கயிற்றில் சிக்கிய நிலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாய மடைந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த வீரசோழன் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பதினெட்டாம்படியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News