உள்ளூர் செய்திகள்

கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-12-16 08:11 GMT   |   Update On 2022-12-16 08:11 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
  • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News