உள்ளூர் செய்திகள்

கண்டக்டர்-தொழிலாளி பலி

Published On 2022-11-29 12:55 IST   |   Update On 2022-11-29 12:55:00 IST
  • கண்டக்டர்- தொழிலாளி விபத்தில் சிக்கி பலியானார்கள்.
  • இதுகுறித்து சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜிக்குமார் (வயது 26). தனியார் பஸ் கண்டக்டரான இவர் சம்பவத்தன்று முத்துராமலிங்கபுரம் பஸ் நிலையம் அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜிக்குமார் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்தவர் முனியராஜ் (33). இவர் அதே பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற முனியராஜ் அருப்புக்கோட்டை-விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயமடைந்த முனியராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News