உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2023-02-17 14:00 IST   |   Update On 2023-02-17 14:00:00 IST
  • வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி மற்றும் சடையம்பட்டி நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரம் குறித்தும், இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி மேலக்காந்திநகரில் செயல்பட்டு வரும் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரம் தயாரிக்கும் விதம், பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளை பிரித்தெடுத்தல் உள்ளிட் டவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் சாத்தூர் எட்வர்டு நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி மற்றும் சடையம்பட்டி நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரம் குறித்தும், இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கீழஓட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.27.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடங்களையும், வெங்கடாசலபுரம் ஊராட்சி கே.கே.நகரில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், சடையம்பட்டி ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும், மேட்டமலை ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், படந்தால் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, கோட்டாட்சியர் அனிதா, செயற்பொறியாளர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News