ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை
- ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.