உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் சுந்தரபாண்டியம் தேவர் சிலை அருகே சாக்கு மூடைகளுடன் நின்ற மினி லாரியை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமியா புரத்தை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் சண்முகராஜ் (32), டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31), லோடுமேன் செல்வகுமார் ஆகியோரை தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.