உள்ளூர் செய்திகள்

இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-09-04 13:58 IST   |   Update On 2022-09-04 13:58:00 IST
  • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார் பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 40). இவரது மனைவி புவனேஸ்வரி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து கமலக்கணன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது மனைவி பானு. நேற்று காலை வெளியே சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News