உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

Published On 2023-11-26 13:47 IST   |   Update On 2023-11-26 13:47:00 IST
  • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • மார்பு சளி, இருமலால் செயற்கை சுவாசக் கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார், விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளது. அவர் இயற்கையாக சுவாசிக்கிறார் எனவும், அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News