உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் ஆண் பிணம்

Published On 2023-07-05 09:16 GMT   |   Update On 2023-07-05 09:16 GMT
  • பச்சை நிற லூங்கி கட்டி இருந்தார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம், கணியம்பாடிக்கும் கண்ணமங்கலம் இடையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்ததாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காட்பாடி ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ெரயில் மோதி இறந்து கிடந்தவர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை நிறம் லூங்கி கட்டி இருந்தார்.

இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இறந்தவர் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News