அனுமதியின்றி வீடுகளுக்கு மரத்துண்டுகளை எடுத்து சென்றனர்.
ஒடுகத்தூர் ரோட்டில் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றம்
- பசுமை சாலை பாலைவனமவதாக புகார்
- வாகனங்களை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
அணைக்கட்டு:
வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சியாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்ற புளிய மரங்கள் இவை சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.
தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டு கூடுதலாக மரங்களை வெட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலையில் தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கிறது. இதனால் அவ்வளியாக செல்லும் வாகன் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகி வருகின்றனர்.
மேலும் மரங்களை வெட்டும் போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் வெட்ட வேண்டும் பசுமையாக இருக்கும் சாலையை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.