உள்ளூர் செய்திகள்
- புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் கோவிந்தனை (வயது 52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.