உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-12-19 09:35 GMT   |   Update On 2022-12-19 09:35 GMT
  • 2 நாட்கள் நடக்கிறது
  • பயிற்சி முகாமை அதிகாரிகள் ஆய்வு

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர், வட்டாரவள மையத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட‌ தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, தொடங்கி வைத்தார். அனைவரையும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி, வரவேற்றார்.

முன்னதாக பயிற்சி முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆசிரியர் பயிற்றுனர்கள். விஜயலட்சுமி, சுகந்தி, மொளூ கு, இசையருவி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வருகிற 21-ந்தேதி பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News