உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2023-08-13 13:53 IST   |   Update On 2023-08-13 13:53:00 IST
  • 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
  • பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர்:

திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே உள்ள காவிலிபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News