உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.அணி புறநகர் மாவட்ட அலுவலகத்தை மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் திறந்து வைத்த போது எடுத்த படம்.

தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணி அலுவலகம் திறப்பு விழா

Published On 2023-03-27 10:25 GMT   |   Update On 2023-03-27 10:25 GMT
  • மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.
  • அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமை யேற்று ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட அவைத்தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் ஜவகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, நகர துணை செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் கூறுகையில் "முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா காட்டிய வழியில் அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்வோம். மீண்டும்அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.இதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். விழாவில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுஜித்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு செயலாளர் மனோகர், நகர அம்மா பேரவை மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News