உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை, விசைத்தறி தொழிலாளி கைது
- சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 40 வயது விசைத்தறி தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது 40) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.