உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

Published On 2022-09-14 04:42 GMT   |   Update On 2022-09-14 04:42 GMT
  • ராம பட்டினம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
  • 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராம பட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன .அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் , குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு இன்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News