உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் 20 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் 12-ந் தேதி நடக்கிறது

Published On 2022-11-10 11:27 GMT   |   Update On 2022-11-10 11:27 GMT
  • நிலுவையில் உள்ள 11072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
  • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டும்.

திருப்பூர் :

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ நடராஜன் வருகிற சனிக்கிழமை 12 ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11072

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News