உள்ளூர் செய்திகள்

அக்கணம்பாளையத்தில் பச்சை மிளகாய் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

பச்சை மிளகாய் விலை சரிவு

Published On 2022-10-02 07:01 GMT   |   Update On 2022-10-02 07:01 GMT
  • பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
  • ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது.

வீரபாண்டி :

பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

பல்லடம் வட்டம், கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த அரசன் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி வயது (55) மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில்; மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை பச்சை மிளகாய் நாற்று நட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது காய் பிடிப்பதற்கு. பச்சை மிளகாய் செடியில் வெள்ளை விழுவதால் இலைகள் சுருங்கி பூக்கள் பாதிப்பை ஏற்பட்டு காய்கள் சரியாக பிடிப்பதில்லை. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது. 20-25 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து விற்பனைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 1500கிலோ வரை கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு உயர்ந்துள்ளது.

பராமரிப்புக்கும் அதிக செலவாகிறது. ஒரு கிலோ குறைந்த பட்சமாக 35 முதல் 40வரை விலை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.ஆனால் ஒரு கிலோ 20 முதல் 25வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News