உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

Published On 2023-01-22 09:18 GMT   |   Update On 2023-01-22 09:18 GMT
  • திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
  • ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

திருப்பூர் :

திருப்பூா் நெருப்பெரிச்சலை அடுத்த குருவாயூரப்பன் பகுதியைச் சோ்ந்தவா் கே.மகேஷ்குமாா் (வயது 32), இவா் திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், போயம்பாளையம் பகுதியில் உள்ள ஆா்.கே.நகா் மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மகேஷ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 

Tags:    

Similar News