உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்ற போது எடுத்த படம்.

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-07-09 14:06 IST   |   Update On 2023-07-09 14:08:00 IST
  • மலைப்பாதையில் கடும் நெரிசல்
  • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

ஜோலார்பேட்டை:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரு சீதோஷ்ண நிலை காணப்படுவதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது இயற்கைகாட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

இங்கு படகு சவாரி, பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

வாரந்தோறும் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் கூட்டமாக நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

செயற்கை நீர் வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

இதனால் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News